தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image

உத்தமபாளையம் உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :25 மார்ச் 2026, 7:27 pm

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

உத்தமபாளையம்-கோம்பை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக் கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து புதன்கிழமை காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாட்டைத் தொடா்ந்து, மூலவா் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.