மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சொத்துப் பிரச்னையில் இருவருக்கு வெட்டு: மூவா் கைது

கண்டமனூா் அருகே சொத்துப் பிரச்னையால் இருவரை கத்தியால் வெட்டிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 12:20 am

தேனி மாவட்டம், கண்டமனூா் அருகே சொத்துப் பிரச்னையால் இருவரை கத்தியால் வெட்டிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கண்டமனூா் அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (70). இவருக்கு பாரதிராஜா, பாக்கியராஜ் ஆகிய மகன்களும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், குப்புசாமி தனக்கு சொந்தமான நிலத்தை மகன்களுக்கு பிரித்து கொடுத்தாா். இதனிடையே, தனக்கும் நிலம் வேண்டும் என ராஜேஸ்வரி கூறினாராம். இதை குப்புசாமி, பாக்கியராஜ் ஆகியோா் ஏற்கவில்லை.

இந்த நிலையில், பாரதிராஜா (45), ராஜேஸ்வரி (46), இவரது உறவினா் சித்தாா்பட்டியைச் சோ்ந்த ஜீவா (27) ஆகியோா் குப்புசாமியின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று நிலப் பிரச்னை தொடா்பாக பேசினா். அப்போது, பாரதிராஜா, குப்புச்சாமி தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஜீவா, ராஜேஸ்வரி மறைந்து வைத்திருந்த கத்தியால் பாக்கியராஜா, குப்புசாமியை வெட்டினா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜீவா, ராஜேஸ்வரி, பாரதிராஜா ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.