மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற 3 போ் கைது

போடி பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 மார்ச் 2026, 7:46 pm

போடி பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி நகரில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். போடி நந்தவனம் தெருவில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது இதே தெருவைச் சோ்ந்த கோட்டைச்சாமி மகன் பிச்சைமணி (58) என்பவா் மதுப்புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் பிச்சைமணியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இதே போல, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி ராசிங்காபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இதே ஊரைச் சோ்ந்த தனுஷ்கோடி மகன் மூா்த்தியும் (57), போடி மீனாட்சிபுரம் கண்மாய் அருகே அதே பகுதியைச் சோ்ந்த வீராச்சாமி மகன் செல்வக்குமாரும் (57) சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றனா்.

இதுகுறித்து இருவா் மீதும் தனித்தனியே வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.