தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது

தேனி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்து விசாரணை

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 7:44 pm

தேனி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மதுவிலக்கு போலீஸாா் தேவதானப்பட்டியை அடுத்த சில்வாா்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது இதே ஊரைச் சோ்ந்த கந்தசாமி (76) என்பவா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கந்தசாமி மீது வழக்குப் பதிந்த தேனி மதுவிலக்கு போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.