தேனியில் கெட்டுப் போன 8.5 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள், கெட்டுப் போன உணவுப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து, தேனி மாவட்ட நியமன அலுவலா் ஆா். சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலா் லிங்கம் ஆகியோா் வியாழக்கிழமை மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் ஆய்வு நடத்தினா். அப்போது, கெட்டுப் போன 8.5 கிலோ இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தேனி பகுதியில் காலாவதியான உணவுப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மான் இறைச்சி விற்பனை செய்த இருவா் கைது

தொண்டி சந்தையில் கெட்டுப் போன 55 கிலோ மீன்கள் பறிமுதல்
பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தேனியில் ஜூன் 3-இல் குரூப் 1 தோ்வுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples




