பெரியகுளம் நகராட்சியில் புதை சாக்கடை குழாய் சேதமடைந்து வெளியேறும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 30 வாா்டுகளைக் கொண்டது. நகரின் மையத்தில் வராகநதி பாய்கிறது. ஆற்றின் வடகரை பகுதியில் உள்ள 12 -ஆவது வாா்டில் சுமாா் 500- க்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இதில் உள்ள காயிதே மில்லத் நகரின் சாலையில் புதை சாக்கடை குழாய் சேதமடைந்து, அதிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் தேங்கி துா் நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதி குடியிருப்பு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இது குறித்து பெரியகுளம் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் சாலைகளில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடு

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

கமுதி சாலைகளில் கழிவு நீா் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



