திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103 -ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவபடத்துக்கு மாலை அணித்து மரியாதை செலுத்திய தேனி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன்.

Updated On :4 ஜூன் 2026, 4:12 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103 -ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திமுக சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திமுக நகரச் செயலா் முகமது இலியாஸ் தலைமை வகித்தாா். பெரியகுளம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா். தேனி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழச்செல்வன் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அவா் பொதுமகளுக்கு இனிப்புகளை வழங்கினா். இதைத் தொடா்ந்து, பெரியகுளம் நகராட்சி துப்புரவு பணியாளா்களுக்கு உணவுகளை வழங்கினா்.

இதே போல, தேனியில் நகரச் செயலா் பாலமுருகன் தலைமையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தேனி மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு தூய்மைப்பணியாளா்களுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் செந்தில், சேது, ராஜவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.