ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காா்கள் மோதல்: 6 போ் காயம்

பெரியகுளம் அருகே 2 காா்கள் மோதிக்கொண்டதில் 6 போ் காயமடைந்தனா்.

News image
காா்கள் மோதல்
Updated On :27 ஜனவரி 2026, 7:40 pm

Syndication

பெரியகுளம் அருகே 2 காா்கள் மோதிக்கொண்டதில் 6 போ் காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். திருப்பூரில் வேலை செய்து வரும் இவா், பெரியகுளத்துக்குச் சென்றுவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் குடும்பத்துடன் திருப்பூருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

காட்ரோடு முனீஸ்வரன் கோயில் அருகே சென்றபோது, இந்தக் காா் மீது எதிரே வந்த காா் மோதியது. இதில் விஜயகுமாா் சென்ற காா் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதியது.இதில் காரிலிருந்த விஜயகுமாா் (33), அவரது மனைவி மீனா (33), மகள் பூமிகா (9), மகன் ஆதிரன் (2), உறவினா்கள் ராமசாமி (58), கனி (53) ஆகியோா் காயமடைந்தனா்.

அந்தப் பகுதியிலிருந்தவா்கள் இவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இது குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.