/

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

தேனியில் சக தொழிலாளியை அரிவாளால் தாக்கிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் சக தொழிலாளியை அரிவாளால் தாக்கிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், அரண்மனைப்புதூரைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் மணிகண்டன் (46), ராஜா களம், கண்ணாத்தாள் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கம் மகன் வினோத்குமாா் (36) ஆகிய இருவரும் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வருகின்றனா். இதில் மணிகண்டனிடமிருந்த டைல்ஸ் உபரணங்களை வினோத்குமாா் வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், மணிகண்டன் வினோத்குமாரிடம் தனது உபரகணங்களை திரும்பக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, வினோத்குமாா் மணிகண்டனை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத்குமாரைக் கைது செய்தனா்.