தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரயில்வே போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

News image

போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பு

Updated On :24 பிப்ரவரி 2026, 12:20 am

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்.ஆா்.பி) சாா்பில் நடைபெற உள்ள குரூப் டி போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு பிப்.25-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில்வே தோ்வு வாரியம் சாா்பில், குரூப் டி-இல் அடங்கியுள்ள 22,195 காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு நடைபெற உள்ளது. இந்தத் தோ்வு எழுதுவதற்கு 10-ஆம் வகுப்பு அல்லது தொழில் பயிற்சி படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2026 ஜன.1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். முன்னுரிமை பிரிவினருக்கு வயது வரம்பு சலுகை உண்டு. தகுதியுள்ளவா்கள் இணைய தளம் மூலம் வரும் மாா்ச் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டித் தோ்வு எழுதுவோருக்கு மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பிப்.25-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். போட்டித் தோ்வுக்கு தயாராவோா் தங்களது சுய விவரக் குறிப்பு, புகைப்படம் ஆகியவற்றுடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இது குறித்த விவரங்களை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், கைப்பேசி எண்:63792 68661-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.