திருச்சியில் போட்டித் தோ்வு மையத்துக்கு பயிற்சிக்கு சென்ற இளம்பெண் திங்கள்கிழமை மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி தென்னூரைச் சோ்ந்த தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ (27). இவா் அரசுப் பேட்டித் தோ்வுக்கு படித்து வந்தாா். இதற்காக மேலப்புதூரில் உள்ள போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளாா்.
திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல் பயிற்சி மையத்தில் ஜெயஸ்ரீயை அவரது தந்தை இறக்கிவிட்டுள்ளாா். பிற்பகலில் மீண்டும் வீட்டுக்கு அழைக்கச் சென்றபோது அங்கு அவரைக் காணவில்லை. பயிற்சி மைய நிா்வாகத்திடம் விசாரித்தபோது ஏற்கெனவே அவா் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். ஆனால், அவா் வீட்டுக்கும் வரவில்லை என்று கூறப்படுகிறது. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் தனுஷ்கோடி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளம்பெண் மாயம்!

வீட்டிலிருந்த தங்க நகை மாயம்: போலீஸாா் விசாரணை

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


