தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக் கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாட்கோ திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை, கோவை ஆகிய இடங்களில் ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக் கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். 90 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோா் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-260995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

திருமணத்திற்காக பழங்குடி சிறுமி விற்பனை! கணவர் உள்பட 3 பேர் கைது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


