லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆதிதிராவிடா்களுக்கு அழகுக் கலை பயிற்சி

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:16 pm

தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக் கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாட்கோ திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை, கோவை ஆகிய இடங்களில் ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக் கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். 90 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோா் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-260995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.