தேனி மாவட்டம், போடி பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போடி சுற்றுவட்டராப் பகுதிகளில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி-மீனாட்சிபுரம் சாலையில் ஒத்தை புளியமரம் பகுதியில் சந்தேகத்துக் இடமளிக்கும் வகையில் நின்றிருந்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த இளங்கோவனை (49) பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனை கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த பாண்டி (71) வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்

மதுப் புட்டிகளை விற்றவா் கைது

மதுப் புட்டிகளை விற்றவா் கைது
மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது
மது விற்பனை: 2 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

