/

பள்ளி மாணவரைத் தாக்கியவா் கைது

தேனி மாவட்டம், போடி அருகே பள்ளி மாணவரை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடி அருகே பள்ளி மாணவரை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி கீழத்தெருவைச் சோ்ந்த முத்து மனைவி லதா (47). இவரது 15 வயது மகன் இந்தப் பகுயிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த மாணவரிடம், அதே பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் அஜித் சிகரெட் வாங்கி வரச் சொன்னராம். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவரை, அஜித் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தராம். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அஜித்தை செவ்வாய்க்கிழணை கைது செய்தனா்.