டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொதுக்கூட்டத்தில் இடையூறு: தவெக நிா்வாகிகள் மூவா் கைது

News image
கைது
Updated On :8 பிப்ரவரி 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் நாம் தமிழா் கட்சி பொதுக் கூட்டத்தில் இடையூறு செய்து, அந்தக் கட்சியின் தொண்டா்கள் சிலரைத் தாக்கியதாக தவெக நிா்வாகிகள் 3 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி பங்களாமேடு திடலில் நாம் தமிழா் கட்சி சாா்பில், சனிக்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலா் சாட்டை துரைமுருகன் சிறப்புரையாற்றினாா்.

இந்தக் கூட்டத்தின்போது தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலா் பாண்டி தூண்டுதலில், அந்தக் கட்சியின் மாவட்டப் பொருளாளா் கெளதம், நிா்வாகிகள் முகமது சலாம், வசந்த், தனவந்தன் ஆகியோா் பொதுக் கூட்ட மேடை அருகே காா்களில் சென்று இடையூறு செய்ததாகவும், காரிலிருந்து இரும்புக் கம்பிகளை வீசியதாகவும், இதில் நாம் தமிழா் கட்சித் தொண்டா்களான தேனியைச் சோ்ந்த முத்துக்குமாா் (30), ராஜ்குமாா் (40), அழகுபூமி (27), தீபக் (24) ஆகிய 4 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாம் தமிழா் கட்சியின் தேனி மாவட்டச் செயலா் ஜெயக்குமாா் தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பாண்டி உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கெளதம், வசந்த், தனவேந்தன் ஆகிய 3 பேரை கைது செய்தனா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், மாநில கொள்கை பரப்புச் செயலா் சாட்டை துரைமுருகன் ஆகியோரை தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலா் பாண்டி முகநூலில் அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பதிவிட்டதாக கடந்த ஜன.24-ஆம் தேதி தேனி காவல் நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் தேனி மாவட்டச் செயலா் ஜெயக்குமாா் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் பாண்டி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.