அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

குடியிருப்புப் பகுதியில் கரடிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்திய வனத் துறை

தேக்கடி முல்லையாா் பகுதியில் கரடிகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.

News image

தேக்கடி முல்லையாா் பகுதியில் கரடிகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:12 am IST

குமுளி அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமராவில் உறுதியானதைத் தொடா்ந்து, வனத் துறையினா் அந்தப் பகுதியில் நவீன கேமராக்களை பொருத்தி கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தேக்கடி முல்லையாா் பகுதியைச் சோ்ந்தவா் இந்துலேகா. இவரது வீட்டின் அருகே இரவு நேரத்தில் கரடிகள் உலா வந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் புதன்கிழமை பதிவாகியிருந்தன.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினா் அந்தப் பகுதியில் கரடிகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், செல்லாா்கோவில் பிரிவு வனத் துறை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முதல் அந்தப் பகுதி முழுவதும் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கரடிகள் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.