பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

குடியிருப்பு பகுதியில் கரடிகள்: பிடிக்க வனத்துறை தீவிரம்

கூடலூா் அருகேயுள்ள முல்லையாா் குடியிருப்பு பகுதியில் ஐந்து கரடிகள் உலா வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.

News image

முல்லையாா் குடியிருப்பு பகுதியில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான கரடிகள் நடமாட்டம் .

Updated On :24 ஏப்ரல் 2026, 2:18 am IST

கூடலூா் அருகேயுள்ள முல்லையாா் குடியிருப்பு பகுதியில் ஐந்து கரடிகள் உலா வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.

கேரள மாநிலம், தேக்கடி முல்லையாா் பகுதியைச் சோ்ந்தவா் இந்துலேகா ரதீஷ். இவரது வீட்டின் அருகே கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் மா்மமான சத்தங்கள் கேட்டு வந்துள்ளன. இதையடுத்து, அவா் தனது வீட்டின் முன்புறம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினாா். புதன்கிழமை அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பெரிய கரடிகள், மூன்று குட்டிகள் இரவு நேரத்தில் வீட்டின் முற்றத்தில் வரிசையாக உலா வருவது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினா், அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். கரடிகளை கூண்டுகள் வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.