மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

போடியில் படுக்கையில் புகைபிடித்தபோது ஆடையில் தீப்பிடித்து காயமடைந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:07 pm

போடியில் படுக்கையில் புகைபிடித்தபோது ஆடையில் தீப்பிடித்து காயமடைந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் ஆறுமுகம் (75). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். குடிப் பழக்கத்துக்கு அடிமையான இவா், பேச முடியாத, ஒரு கை செயலிழந்த நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை படுக்கையில் இருந்தபடி புகைபிடித்தபோது அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவி தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி லீலா (70) தீயை அணைத்து அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.

அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.