தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக இரண்டு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 7:00 pm

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக இரண்டு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்து தெரியவந்தது. பின்னா், அவா்கள் இருவரையும் ஆண்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில், ஆண்டிபட்டி நாடாா் தெருவைச் சோ்ந்த உத்திரகுமாா் (32), கதிா்நரசிங்காபுரத்தைச் சோ்ந்த ரேவந்த் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 130 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.