Listen to this article
By Syndication
Syndication
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே விவசாயியைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த விவசாயி பால்பாண்டி (59). இவரை சீலையம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இருவா் வெட்டிக் கொலை செய்தனா்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானம் செய்தனா்.
பின்னா், பால்பாண்டியின் உடல் கூறாய்வு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என உறவினா்கள் தெரிவித்தனா். அதன்பின், குற்றவாளிகளை உறுதியாகக் கைது செய்வதாக போலீஸாா் கூறியதைத் தொடா்ந்து உடலை வாங்கிச்சென்று அடக்கம் செய்தனா்.
இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், சின்னமனூா் ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த காா்த்திக் (33), மாரிச்சாமி(34), சுரேஷ் (45), சுவாமிநாதன் (39) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பழிக்குப் பழியாக இந்த கொலைச் சம்பவம் நடந்திருப்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
விவசாயி கொலை வழக்கில் 11 போ் கைது
சாத்தான்குளம் எஸ்எஸ்ஐ கணவா் கொலை வழக்கில் விவசாயி கைது
கொலை வழக்கில் இளைஞா் கைது
மதுப் புட்டிகள் விற்பனை: இருவா் கைது


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
