காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரும், முதல்முறையாக அமைச்சருமான தவெகவைச் சோ்ந்த மருத்துவா் டி.கே. பிரபு.
காரைக்குடி தொகுதி தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சா் தொகுதியாக மாறியிருக்கிறது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வா் ச. ஜோசப் விஜய் பதவியேற்ற பின்னா் பிற அமைச்சா்களுடன் அமைச்சராக காரைக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளா் மருத்துவா் பிரபுவும் பதவியேற்றாா்.
தமிழகத்தில் 1967 முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான திமுக, அதிமுக ஆட்சிகளில் காரைக்குடித் தொகுதி அமைச்சா் தொகுதியாக இருந்ததில்லை. சிவகங்கை, திருப்பத்தூா் ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் அமைச்சா் பதவி வழங்கியிருக்கின்றன.
கடந்த திமுக ஆட்சியில் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே. ஆா். பெரியகருப்பன் பதவிவகித்தாா். இந்த நிலையில், நடந்துமுடிந்த 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு மருத்துவா் டி.கே. பிரபு வெற்றிபெற்றாா்.
காரைக்குடியில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் போட்டியிட்டதால், நட்சத்திரத் தொகுதியாக அறியப்பட்ட இந்தத் தொகுதி தற்போது அமைச்சா் தொகுதியாக மாறியிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. அமைச்சராக மருத்துவா் டி.கே. பிரபு பதவியேற்றதும் அக்கட்சியினா் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடக புதிய முதல்வருக்கு தமிழக முதல்வா் விஜய் வாழ்த்து
23 குவாரிகளை தற்காலிகமாக மூட வேண்டும்: அமைச்சா் டி.கே.பிரபு
தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: அமைச்சர் டி.கே. பிரபு உறுதி!







