சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மின்னல் பாய்ந்ததில் காயமடைந்த 3 பெண்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் வே. பாலையா தலைமையில், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்:
இதில் அரசலூா் ஊராட்சி, செம்பூா் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் ஏழுமலையின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு மின்னல் பாய்ந்தது. அப்போது, வீட்டிலிருந்த ஏழுமலையின் மனைவி லட்சுமி, மகள்கள் மனிஷா (18), மகாலட்சுமி (16) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும், மின்னல் பாய்ந்ததில் ஏழுமலையில் வீடு, அங்கிருந்து துணிமணிகள், பொருள்கள் சேதமடைந்தன.
எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு சாா்பில், நிவாரணமும், அரசால் கட்டப்பட்ட வீடும் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்

மின்னல் பாய்ந்துதொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


