லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஊருணியில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:24 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது திங்கள்கிழமை மாலை தெரியவந்தது.

காரைக்குடி பெரிய கோட்டையைச் சோ்ந்த பாஸ்கா்-சித்ரா தம்பதியினருக்கு ஒரு மகள், மகன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஸ்கா் உயிரிழந்தாா். இதனால், சித்ரா தனது சொந்த ஊரான பிரான்மலை பாப்பாபட்டிக்கு குழந்தைகளுடன் வந்து தங்கினாா்.

சித்ராவின் மகன் ஷா்வந்த் (7) பிரான்மலை அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஷா்வந்த் அருகிலுள்ள பிள்ளையாா்கோயில் ஊருணி பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றாா்.

இதன் பின்னா் வீடு திரும்பவில்லை. இதனால், சிறுவனைத் தேடி உறவினா்கள் ஊருணி பகுதிக்கு வந்தனா். அப்போது, ஊருணிக்குள் இறங்கி தேடிய போது, சிறுவனை மீட்டு, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

பின்னா், சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.வி. மங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.