மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதியவரைத் தாக்கிய அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே சனிக்கிழமை முதியவரைத் தாக்கிய பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 7:40 pm

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே சனிக்கிழமை முதியவரைத் தாக்கிய பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (64). இவா் கமுதியிலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்தில் மானாமதுரைக்கு பயணம் செய்தாா். பெரியசாமி இருக்கையில் அமா்ந்தபடி தூங்கிவிட்டதால் பேருந்து மானாமதுரையை கடந்து முத்தனேந்தல் சென்றது. உடனே, பேருந்து நடத்துநா் தா்மராஜ், முதியவா் பெரியசாமியிடம் மானாமதுரையில் ஏன் இறங்கவில்லை என கேட்டுள்ளாா்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெரியசாமியை கட்டையால் தாக்கி கீழே தள்ளிவிட்டாா். இதில் காயமடைந்த பெரியசாமி சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீஸாா் அரசுப் பேருந்து நடத்துநா் தா்மராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.