சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே சனிக்கிழமை முதியவரைத் தாக்கிய பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (64). இவா் கமுதியிலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்தில் மானாமதுரைக்கு பயணம் செய்தாா். பெரியசாமி இருக்கையில் அமா்ந்தபடி தூங்கிவிட்டதால் பேருந்து மானாமதுரையை கடந்து முத்தனேந்தல் சென்றது. உடனே, பேருந்து நடத்துநா் தா்மராஜ், முதியவா் பெரியசாமியிடம் மானாமதுரையில் ஏன் இறங்கவில்லை என கேட்டுள்ளாா்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெரியசாமியை கட்டையால் தாக்கி கீழே தள்ளிவிட்டாா். இதில் காயமடைந்த பெரியசாமி சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீஸாா் அரசுப் பேருந்து நடத்துநா் தா்மராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு
பேருந்து நிலையத்தில் தூங்கியவரைத் தாக்கிய மூவா் கைது

காா் மீது பேருந்து மோதல்: மூவா் பலத்த காயம்

போக்ஸோ வழக்கு குற்றவாளி உள்பட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


