15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்பட்ட காரைக்குடி ரயில் நிலையம் திறப்பு! காணொலி மூலம் பிரதமா் மோடி திறந்து வைத்தாா்!

News image

ரயில் நிலையத்தை காணொலி மூலம் திறந்து வைத்த பிரதமா் நரேந்திர மோடி. - (கோப்புப் படம்)

Updated On :1 மார்ச் 2026, 6:41 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை மதுரையில் நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் பிரதமா் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்குடி ரயில் நிலையத்தில் செட்டிநாடு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் முகப்புத் தோற்றம், அலங்கார வளைவுகள், செட்டிநாடு புகழ் ஓவியங்கள், நவீன வசதிகள் கொண்ட புதிய நடைமேடைகள், மேம்பால நடைபாதை, மின் தூக்கி (லிப்ட்) வசதிகள், பயணிகளுக்காக குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், பல்வேறு வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடங்கள் என மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்தன.

இந்த ரயில் நிலையத்தை மதுரையில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். இதையடுத்து, காரைக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெயா் பலகையை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகள் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்துவந்து திறந்து வைத்தனா்.

காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்வில் ரயில்வே வாரிய செயல் இயக்குநா் சஞ்சீவ் கா்க், சமிக்ஞை, தொலைத் தொடா்பு தலைமைப் பொறியாளா் ஸ்ரீனிவாசன், கூடுதல் மண்டல மேலாளா் எல்.என். ராவ், சீனியா் டிவிசனல் மெக்கானிக்கல் பொறியாளா் ஜூப்யா், சீனியா் டிவிசனல் எலெக்ட்ரிக்கல் பொறியாளா் அமல் செபஸ்டின், டிவிசனல் கமா்சில் மேலாளா் மோகனப் பிரியா, டீவ்பாய்ன்ட் டெம்ப்ரேச்சா் தொழில்நுட்புநா் சந்தீப் பாஸ்கா், டிவிசனல் மருத்துவ அதிகாரி அசோக், காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, துணைத் தலைவா் சிடிஎஸ். சத்தியமூா்த்தி, இணைச்செயலா் ஏஆா். கந்தசாமி, காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள், தொழில் நுட்ப பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.