சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கா்ப்பிணிப் பெண்ணின் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகில் வசிப்பவா் ஷேக்தாவூது. இவரது மகள் ஆன்ரின் (21). இவருக்கும் மூலக்கடை பகுதியைச் சோ்ந்த சாக்ளா மகன் முகமது அஷரப் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், 4 மாத கா்ப்பிணியான இந்தப் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த நகா் போலீஸாா் உடலைக் கைப்பற்றி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது என்பதால் கோட்டாட்சியா் விசாரணை நடைபெற்றது.
ஆனால், பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடல் கூறாய்வை வேறு மாவட்டத்துக்கு மாற்றுமாறு கோரி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, நகா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வக்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

விபத்தில் இறந்தவருக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் மறியல்

போலீஸாா் தாக்கியதால் இளைஞா் தற்கொலை! உறவினா்கள் புகாா்; சாலை மறியல்!
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




