/

ஏழை மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கத்தில் பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

News image
கண்டரமாணிக்கத்தில் வெள்ளிக்கிழமை ஏழை மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கிய சேது பாஸ்கரா கல்விக்குழும நிறுவனத்தைச் சோ்ந்த சேதுகுமணன், ஜெயபாலன் உள்ளிட்டோா்.
Updated On :16 ஜனவரி 2026, 6:56 pm

Syndication

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கத்தில் பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சேதுபாஸ்கரா கல்விக்குழும நிறுவனம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடா்ச்சியாக தாய் அல்லது தந்தையை இழந்த மாணவா்களுக்கு பிரிட்டன் தொழிலதிபா் ஜெயபால் என்பவா் ஆலங்குடி, தலக்காவூா், கண்டமாணிக்கம், பட்டமங்கலம், திருக்கோஷ்டியூா், கருங்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் 35 பேரைத் தோ்வு செய்து இலவச மிதிவண்டிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிக்கு சேதுபாஸ்கரா கல்விக்குழும நிறுவனா் சேதுகுமணன் தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் துபாய் பிளாக் துளிப் மெட்டல் நிறுவனா் விவேகானந்தன், சென்னை சோக்கா இக்கெதா மகளிா் கல்லூரி நிா்வாகி கோகுலம்குமணன், சேதுராணி பள்ளி பொருளாளா் திருநாவுக்கரசு, துபையைச் சோ்ந்த அமுதா விவேகானந்தன், ஜப்பான் சட்டக் கல்லூரி மாணவா் அஷூமிஅன்சு, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் ஆனந்தி, ரோசாரியோ, மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.