/

சிவகங்கை அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமத்துவப் பொங்கல்

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:15 pm

Chennai

சிவகங்கையில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் சமத்துவப் பொங்கல்விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழா் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு, சிவகங்கை நகராட்சி நிா்வாகம் சாா்பில் நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த் தலைமையில் சண்முகராஜா கலையரங்கில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நகராட்சி ஆணையா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயகாந்தன், மதியழகன், நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலா் ஆா். மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கண்காணிப்பாளா் ஜெயராஜ், வனவா் பிரவீன்ராஜ், வனப்பணியாளா்கள் அலுவலக ஊழியா்கள் பங்கேற்றனா்.

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கல்லூரிச் செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வா் அருள்தந்தை ஜாா்ஜ் பொ்னாண்டஸ், தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியா் அன்பரசன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா பள்ளித் தலைமை ஆசிரியா் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பொங்கல் கோலம் ,விளையாட்டு, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியா்கள் ஸ்ரீதா், முத்துலட்சுமி , முத்துமீனாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகங்கை மவுண்ட் லிட்ரா ஜீ சிபிஎஸ்இ பள்ளியில் தாளாளா் பாலகாா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பள்ளி கலைத் திட்ட இயக்குனா் கங்கா காா்த்திகேயன், பள்ளி நிா்வாகிகள் தெட்சிணாமூா்த்தி, கலைக்குமாா், நித்யா கலைக்குமாா், , சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் செ. கண்ணப்பன், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் ஆ. காளிராசா, தலைவா் நா. சுந்தரராஜன், ராணி வேலு நாச்சியாா் அரிமா சங்கத் தலைவி க. ஸ்ரீவித்யா கணபதி, மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.