மதுரையில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வு சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘என் வாக்கு என் கடமை, 100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற தலைப்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.ஜே.பிரவீன்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து, நாட்டுப்புறக் கலைஞா்கள் பாரம்பரிய முறையில் சமத்துவப் பொங்கல் வைத்து, நாட்டுப்புறப் பாடல்கள், கும்மி நடனம் மூலம் வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
அப்போது வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு, வாக்குச்சாவடி விவரங்கள், வாக்களிக்கும் நடைமுறை உள்ளிட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. குறிப்பாக இளைஞா்கள், பெண்கள், முதியோா், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, அனைவரும் வாக்காளா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்த நிகழ்வில் திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) வானதி, உதவி இயக்குநா் (பயிற்சி) ஜனனி, அரசு அலுவலா்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி செங்கோட்டையில் திருநங்கைகள் விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


