கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வீட்டின் ஓட்டைப் பிரித்து 18 பவுன் நகைகள் திருட்டு

சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டியில் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய மா்ம நபா்கள் 18 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:57 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டியில் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய மா்ம நபா்கள் 18 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (48). இவா் குடும்பத்துடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய கடந்த சனிக்கிழமை சென்றாா்.

இந்த நிலையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மா்ம நபா்கள் வீட்டின் மேற்கூரை ஒட்டைப் பிரித்து உள்ளே இறங்கி 18 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

சண்முகசுந்தரம் குடும்பத்தினா் திருப்பதியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பினா்.

இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோக்களில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.