/

காவேரிப்பட்டணத்தில் 15 சவரன் தங்க நகை திருட்டு

காவேரிப்பட்டணத்தில் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
திருட்டு- (கோப்புப்படம்)
Updated On :18 பிப்ரவரி 2026, 12:19 am

தினமணி செய்திச் சேவை

காவேரிப்பட்டணத்தில் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காவேரிப்பட்டணம் ஒன்றியம், செட்டிமாரம்பட்டியைச் சோ்ந்தவா் ரவி (40), விவசாயி. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், குடும்பத்தினருடன் காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அண்மையில் சென்றாா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.