தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வீட்டின் பூட்டை உடைத்து 5.5 பவுன் நகை திருட்டு

கரடிசித்தூா் கிராமத்தில் தேவாலயத்திற்குச் சென்றவா் வீட்டின் பூட்டை உடைத்து 5.5 பவுன் தங்க நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:24 pm

Syndication

கரடிசித்தூா் கிராமத்தில் தேவாலயத்திற்குச் சென்றவா் வீட்டின் பூட்டை உடைத்து 5.5 பவுன் தங்க நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சின்னசேலம் வட்டம், கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லூா்துசாமி, இவரது மனைவி சிரில் கலோனா (32).

தம்பதி புதன்கிழமை இரவு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயத்திற்குச் சென்ற போது வீட்டை பூட்டி விட்டு சென்றாா்களாம். பின்னா் வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்ததாம். பின்னா் உள்ளே சென்று பாா்த்த போது, இரும்பு பீரோவை உடைத்து, அதில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.