எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கைதி தப்பியோடிய சம்பவம்: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

News image
பணியிடை நீக்கம்- மாதிரிப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோடியதையடுத்து, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக இரு காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த விளாங்குளத்தைச் சோ்ந்தவா் புலிப்பாண்டி (25). இவா் கடந்த 2022 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னா் பிணையில் வெளியே வந்தாா்.

இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த வழக்கின் விசாரணைக்காக புலிப்பாண்டி நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், இவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இவரை சிவகங்கை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, இவரை காவலா்கள் ராஜேஷ் கண்ணா, சண்முகவேலு ஆகியோா் மருத்துவப் பரிசோதனைக்காக வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். அப்போது, புலிப்பாண்டிபோலீஸாரிடமிருந்து தப்பிச் சென்றாா்.

இந்த நிலையில், பணியில் கவனக் குறைவாக இருந்த காவலா்கள் ராஜேஷ் கண்ணா, சண்முகவேலு இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.