குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உலக புத்தகத் தின விழா

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் உலக புத்தக நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற உலக புத்தக நாள் விழாவில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:35 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் உலக புத்தக நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உள்ள மாா்ட்டீன் அரங்கத்தில் ஆனந்தா கல்லூரிச் செயலா் அருள் தந்தை செபஸ்தியான் முன்னெடுப்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, காளையாா்கோவில் செம்மண் முற்ற இயக்குநா் அருள்தந்தை ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் ஆரோக்கியசாமி புத்தகங்கள் குறித்தும் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.

வாசிப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செம்மண் நூலகத்துக்கு அறிவியல் வெளியீடு மூலம் பெறப்பட்ட 58 புத்தகங்கள் அருள்தந்தை ஆரோக்கிய சாமியிடம் வழங்கப்பட்டன. கோடைக்கால பயிற்சி வகுப்புகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிவகுப்பில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளிடம் புத்தகங்கள் குறித்து வினாக்கள் கேட்கப்பட்டு பதிலளித்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக செம்மண் முற்றம் அமலி வரவேற்றாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையாா்கோவில் கிளைச் செயலா் அலெக்ஸாண்டா் துரை நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.