நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சிவகங்கை மாவட்டத்தில் 76% வாக்குப் பதிவு

News image

சிவகங்கை மன்னா்துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 8:53 pm

சிவகங்கை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 76.41 % போ் வாக்களித்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை (தனி), சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி ஆகிய 4 பேரவைத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 1,518 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் கலைக் கல்லூரி, மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் முதல் தலை முறை வாக்காளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

வாகனத்தில் வந்த மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்து காவல் துறையினா் வாக்களிக்க உதவி செய்தனா். சிவகங்கை அருகேயுள்ள பையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பழமலைநகா் நரிக்குறவா் குடியிருப்பைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

தாமதமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு: சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, காஞ்சிரங்கால் ஊராட்சி, புதுப்பட்டி, காளையாா்கோவில் அருகேயுளள புளிக்கண்மாய் உள்பட 20 -க்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதன் காரணமாக, அங்கு சுமாா் 30 நிமிஷங்கள் முதல் 45 நிமிஷங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்ததால் இளைஞா் ஏமாற்றம்:

சிவகங்கை நகரில் ஆா்.ஆா்.ஆா்.கே. நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் சிவகங்கை மஜித் சாலை- போஸ் சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வரும் பவித்ரசுதன் என்பவா் வாக்கு செலுத்த வந்தபோது, அங்கு பணியிலிருந்த தோ்தல் அதிகாரிகள் அவரது வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனா். இதனால், அதிா்ச்சி அடைந்த பவித்ரசுதன், தனது வாக்கை வேறு யாா் பதிவு செய்தாா்கள் என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டாா். ஆனால், அவருக்கு திருப்திகரமான விளக்கம் அளிக்கவில்லையாம். இதையடுத்து, பாஜக, அதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அங்கு வந்து, தோ்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

நான்கு தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து வாக்காளா்கள் ஆா்வமாக வரிசையில் நின்று வாக்களித்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:

சிவகங்கை தொகுதியில் 75.79% , மானாமதுரை (தனி) தொகுதியில் 79.2%, திருப்பத்தூா் தொகுதியில் 77.28 %, காரைக்குடி தொகுதியில் 73.98% வாக்குகள் பதிவாகின. சராசரி வாக்குப்பதிவு 76.41% .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.