வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:32 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், அவரது தந்தை ப. சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளது. கடந்த மாா்ச் மாதம் 11- ஆம் தேதி காலையில் இந்த அலுவலகத்தை அங்கு பணியாற்றும் ஊழியா் திறக்க வந்த போது வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் நிா்வாகிகள் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். மேலும் அந்த இடத்தை சிவகங்கை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் ஆய்வு செய்தாா். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடா்புடைய புதுவயலைச் சோ்ந்த முகம்மது ஆசிக் (22), கல்லூரி மாணவா் சிவா (எ) யுகேந்திரன் (19) ஆகிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், ஈரானின் உச்சபட்ச தலைவா் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட போது காா்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்த கருத்துக்கு எதிா்வினையாற்றுவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவா்கள் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.