மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image

விபத்தில் உயிரிழந்த கருப்பையா.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:44 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் இந்திராநகரைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகன் கருப்பையா (28). கட்டடத் தொழிலாளி. இவரது நண்பா் காட்டாம்பூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அபிமன்யு (27). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூரிலிருந்து திருக்கோஷ்டியூருக்குச் சென்றனா்.

அப்போது காட்டாம்பூா் பெரியபாலம் அருகே நிலை தடுமாறி பாலத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே கருப்பையா உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த அபிமன்யு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து திருக்கோஷ்டியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.