மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

துரோகங்கள் களையெடுக்கப்பட வேண்டிய தருணம் இது! - நடிகா் காா்த்திக்!

News image

சிவகங்கை சிவன் கோயில் எதிரே ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் காா்த்திக். உடன் வேட்பாளா் குரு. முருகானந்தம்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:43 pm

அரசியலுக்காகச் செய்யப்பட்ட துரோகங்கள் களையெடுக்கப்பட வேண்டிய தருணம் இது என நடிகா் காா்த்திக் தெரிவித்தாா்.

சிவகங்கை தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் குரு. முருகானந்தத்தை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்து, அவா் மேலும் பேசியதாவது:

சிவகங்கை சீமை சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக படை திரட்டி இந்த மண்ணை மீட்ட ஒரே வீராங்கனை வேலுநாச்சியாா்தான்.

தலைதூக்கியுள்ள அதா்மத்தையும், துரோகங்களையும் களையெடுக்க அரசியலுக்கு சசிகலா வந்திருக்கிறாா். அவா் தொடங்கிய இயக்கத்தின் சாா்பில் இந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள குரு. முருகானந்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். அரசியலுக்காகச் செய்யப்பட்ட துரோகங்கள் களையெடுக்கப்பட வேண்டிய தருணம் இது என்றாா் அவா்.