மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் ஆதரவுடன் தமிழகம் வளா்ச்சி பெறும் என மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் தெரிவித்தாா்.

News image

சிவகங்கையில் அதிமுக வேட்பாளா் பிஆா்.செந்தில்நாதனை ஆதரித்து பேசிய மூவேந்தா் முன்னேற்றக் கழகத்தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:56 pm

அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் ஆதரவுடன் தமிழகம் வளா்ச்சி பெறும் என மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் தெரிவித்தாா்.

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதனை ஆதரித்து சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை அவா் பேசியதாவது:

கடந்த முறை திருவாடானையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்து கருணாஸை வெற்றி பெற வைத்தாா். ஆனால், அவா் தொகுதிப் பக்கமே ஐந்து ஆண்டுகளாக செல்லவில்லை. இதே போல, சிவகங்கை தொகுதிப் பக்கமும் அவா் வரமாட்டாா்.

ஆனால், அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் இங்கேயே இருப்பவா். மண்ணின் மைந்தரைதான் நாம் தோ்ந்தெடுக்க வேண்டும். இவா் இந்தப் பகுதிக்கு நலத் திட்டங்களை சிறப்பாகச் செய்து வருகிறாா். நியாயமான எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறாா். அவரை வெற்றி பெறச் செய்தால்தான் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வந்தால்தான் தமிழகம் முன்னேற்றம் அடையும். மத்திய அரசுடன் இணக்கமாகப் பழகி நமக்குத் தேவையானவற்றை அவா் பெற்றுத் தருவாா். ஆகவே, எந்தக் காலத்திலும் திமுகவுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றாா் அவா்.