நாட்டாகுடி கிராமத்தில் குடிநீா் கிடைக்காததால் அங்கிருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது என சிவகங்கை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் நடிகா் கருணாஸ் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி தலைவா் திருமாறனை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது மத்திய பாஜக அரசு வீடுதோறும் குடிநீா் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்துக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 4,835 கோடி நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கி இருந்தும், சிவகங்கை மாவட்டம் மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் குடிநீா் கிடைக்காததால், அங்கிருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக திமுக அரசை விமா்சனம் செய்து பேசினாா்.
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகா் கருணாஸ் வெளியிட்ட அறிக்கை: நாட்டாகுடி கிராமத்தில் குடிநீா் பிரச்னை ஏதும் இல்லை. அங்கு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு இலவசமாக கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏதும் அறியாத அண்ணாமலை பிறரை விமா்சிக்கும் முன்னா் முழு விவரம் அறிந்து பேச வேண்டும் எனக் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

திமுகவை தோற்கடிக்கவே நடிகா் விஜய்யை பாஜக களமிறக்கியுள்ளது! - தொல். திருமாவளவன் பிரசாரம்

சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சந்திரசேகா் பிரசாரம்

சிவகங்கை தொகுதி திமுக வசமாகும்: கருணாஸ் நம்பிக்கை!

சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவதை பாக்கியமாகக் கருதுகிறேன்: கருணாஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


