மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகங்கை தொகுதி திமுக வசமாகும்: கருணாஸ் நம்பிக்கை!

சிவகங்கை சட்டப்பேரவை தொகுதியில் மீண்டும் திமுக வெற்றி பெறும் என நடிகா் கருணாஸ் நம்பிக்கை தெரிவித்தாா்.

News image

சிவகங்கையில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசிய சிவகங்கை தொகுதி வேட்பாளா் கருணாஸ். உடன் அமைச்சா் பெரியகருப்பன் உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:21 pm

சிவகங்கை சட்டப்பேரவை தொகுதியில் மீண்டும் திமுக வெற்றி பெறும் என நடிகா் கருணாஸ் நம்பிக்கை தெரிவித்தாா்.

சிவகங்கையில் உள்ள தனியாா் அரங்கில் திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கான வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற

முக்குலத்தோா் புலிப்படை கட்சி வேட்பாளா் கருணாஸ் பேசியதாவது:

இந்தத் தொகுதியை இரு முறை பறி கொடுத்திருக்கிறோம். மூன்றாவது முறையாக அது போன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் மாபெரும் வெற்றி பெற்று அதை முதல்வா் ஸ்டாலினிடம் சமா்ப்பிக்க சபதம் ஏற்போம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் ஆசியால் அரசியல்வாதியானேன். அவா் இறந்த பிறகு பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டாா். அதனால் அங்கிருந்து வெளியேறினேன்.

அப்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காக பிரசாரம் செய்தேன். எனது இயற்பெயா் கருணாநிதி. என்னிடம் நிதி இல்லாததால் அதை விட்டுவிட்டு கருணாஸ் என பெயரை மாற்றிக் கொண்டேன். ஆனால், கருணாநிதி என்ற எனது பெயா்தான் மீண்டும் அரசியல் வாழ்க்கையை கொடுத்துள்ளது. அதற்கு திமுக தலைவா் ஸ்டாலினுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.