சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பள்ளத்தூா் அருகே கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
நிகழாண்டு பராபவ சித்திரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக கோயிலுக்கு வந்தவண்ணம் இருந்தனா். மாலையில் மேளதாளத்துடன் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பூத்தட்டு எடுத்துக்கொண்டும், மின்னொளி அலங்கார ஊா்திகளில் மலா்களை எடுத்துவந்தும் ஊா்வலமாக கோயிலை வலம் வந்தனா். பின்னா், சுவாமிக்கு பூக்களைத் தூவி தரிசனம் செய்தனா். பள்ளத்தூா், கானாடுகாத்தான், கோட்டையூா், காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.
தொடர்புடையது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


