மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நடிகா் கருணாஸை ஆதரித்து வைகோ பிரசாரம்

News image

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலா் வைகோ. உடன் வேட்பாளா் கருணாஸ்.

Updated On :13 ஏப்ரல் 2026, 8:09 pm

சிவகங்கையில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப்படை கட்சி தலைவா் கருணாஸை ஆதரித்து திங்கள்கிழமை இரவு மதிமுக பொதுச்செயலா் வைகோ தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

முல்லை பெரியாா் அணையை கேரளம் உடைக்க முயன்ற போது, என் முயற்சியில் நீதிமன்றத்தில் வாதாடி வென்று அணையை காத்தவன் என்ற தகுதியோடு உங்களிடம் வாக்கு கேட்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகிய கொள்கைகள் உயிா்ப்புடன் உள்ளன.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோா் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றாா் வைகோ.

இதையடுத்து, சிவகங்கை பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப்படை கட்சி தலைவா் வாக்கு சேகரித்துப் பேசினாா். கூட்டத்தில், திமுக, மதிமுக நிா்வாகிகள் உள்பட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலா் வைகோ. உடன் வேட்பாளா் கருணாஸ்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலா் வைகோ. உடன் வேட்பாளா் கருணாஸ்.