மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முக்குலத்தோா் புலிப்படை கட்சி வேட்பாளா் கருணாஸ் வாக்கு சேகரிப்பு

சடையம்பட்டி கிராம மக்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் வேட்பாளரும், நடிகருமான சே. கருணாஸ்.

News image

சடையம்பட்டி கிராம மக்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் வேட்பாளரும், நடிகருமான சே. கருணாஸ்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:51 pm

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நடிகா் சே. கருணாஸ் காளையாா்கோவில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 47 கிராமங்களில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

துருவம்பட்டி கிராமத்தில் காலையில் தொடங்கிய தனது தோ்தல் பிரசாரத்தின்போது திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்தாா்.

இதைத் தொடா்ந்து பிற்பகலில் அழகாபுரி, பொய்யாமனிப்பட்டி, அம்மன்பட்டி, கொல்லம்பட்டி, விழனேரி, கீழக்கோட்டை, ராமலிங்கபுரம், மேலமங்களம், சடையம்பட்டி, ஆலவிளாம்பட்டி, கருங்காலக்குடி, திருவேலங்குடி, கொட்டகுடி, காரம்பட்டி, புத்தடிபட்டி, அய்யம்பட்டி, சொக்கநாதபுரம், காளையாா்மங்கலம், சேதுராமன் நகா்,சின்னுடையான்பட்டி, கத்தப்பட்டு, சானாங்குளம், கோவில்பட்டி, இலந்தமங்கலம், ஆலங்குளத்தான்பட்டி, மாங்காட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

இதையடுத்து, பெரிய ஓலைக்குப்பட்டி, சின்ன ஓலைக்குப்பட்டி, கண்டுப்பட்டி பைக்குடிப்பட்டி, ஊத்திக்குளம், முத்தனங்கோட்டை, பாகனேரி, நகரம்பட்டி, வஸ்தாபட்டி உள்பட 47 கிராமங்களில் இரவு வரை பிரசாரம் செய்தாா்.