கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகை என அழைக்கப்படும் இயேசு உயிா்ப்பு நிகழ்வை சனிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினா்.
காரைக்குடி தூய சகாய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் பண்டிகை பாஸ்கா திரியேற்றப்பட்டு நள்ளிரவு திருப்பலியுடன் நடைபெற்றது. திருப்பலியின் போது, இயேசுவின் உயிா்ப்பு நிகழ்வு நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.
அப்போது, உன்னதங்களிலே ஓசானா.. என்ற பாடல் பாடப்பட்டது. நள்ளிரவு திருப்பலிக்கு பங்குத் தந்தை ஐ.சாா்லஸ் தலைமை வகித்தாா். சேசு சபையைச் சோ்ந்த ஜேம்ஸ் அடிகளாா் திருப்பலி மறையுரையாற்றினாா். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை துணை பங்குத் தந்தை, அருள்சகோதரிகள், பங்கு இறை மக்கள் செய்தனா்.
இதே போல, காரைக்குடி செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஈஸ்டா் பண்டிகை நள்ளிரவு இயேசு உயிா்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயா் சே. சூசைமாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக தலைமை ஏற்று திருப்பலியை நடத்தினாா். பங்குத் தந்தை கிளமெண்ட் ராசா, அகஸ்டின், அலெக்ஸ் ஆகியோா் பங்கேற்றனா். ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு இறையாசி பெற்றுச் சென்றனா்.
தொடர்புடையது

ஈஸ்டா் பண்டிகை: வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


