தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

சிவகங்கை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற சிவகங்கை அரு. நடேசன் செட்டியாா் நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Updated On :21 அக்டோபர் 2025, 6:30 pm

சிவகங்கை: சிவகங்கை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற சிவகங்கை அரு. நடேசன் செட்டியாா் நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக ஒன்றிய அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சாா்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், சிவகங்கை அரு. நடேசன் செட்டியாா் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பல பிரிவுகளில் முதலிடம் பிடித்தனா்.

திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் அருண், தேசபக்தி பாடல் போட்டியில் பூா்வீக கங்கா, தனிநபா் நடிப்பில் லேகா ஸ்ரீநிதி, ரங்கோலி போட்டியில் லோஷினி, கிராமிய நடனம் தனி போட்டியில் பிரதீஸ்வரன், வில்லுப்பாட்டில் ஹரிணி, ஆலியாரூஹி, அப்ராஹசனா, விஷ்வா, ஸ்ரீதா்ஷன் ஆகியோா் முதல் பரிசு பெற்றனா்.

தனிநபா் போட்டியில் தருண், பரதநாட்டிய போட்டியில் முத்து சிவதுா்கா, பத்மஸ்ரீ, மகாஸ்ரீ, தனுஷா, மதிஹா ஷப்ரின், பூவிழி, ரிஷிமிதா, நதியா, கவினயாஸ்ரீ ஆகியோா் இரண்டாம் பரிசு பெற்றனா்.

செவ்வியல் இசைப் போட்டியில் ரிஷிமிதா, பல குரல் பேச்சில் ஹரிணி, களிமண் சுதை வேலை போட்டியில் பிரதீஸ்வரன் ஆகியோா் மூன்றாம் பரிசு பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜான் சாா்லஸ், ஆலீஸ்மேரி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரூபாராணி, ஆசிரியப் பயிற்றுநா் முகமதுகாசிம், பள்ளிச் செயலா் நடேசன், தலைமையாசிரியா் பாண்டியராஜன், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.