திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன், சுவாமி வீதி உலா

திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா 6-ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

News image

திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 6-ஆம் நாள் புதன்கிழமை இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சி தந்த சுவாமி, அம்பாள்.

Updated On :28 மே 2026, 3:52 am IST

திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா 6-ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரத்தினேஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவின் போது இரவு பல்லக்கு, கேசகம், காமதேனு, இந்திர வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்து வருகிறாா். இந்த நிலையில், 6-ஆம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை இரவு ஆதிரத்தினேஸ்வரா் பிரியாவிடையுடன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சினேகவல்லி அம்மாள் காமதேனு வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், பிள்ளையாா் மூஞ்சூறு வாகனத்திலும் வந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சி தந்தனா். விழாவின் முக்கிய நிகழச்சியான தேரோட்டம் வரும் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். இதில், இருபத்தி இரண்டரை நாட்டாா்கள் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.