ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் மதுபாட்டில் விற்பனை செய்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் அந்தப் பகுதியல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதில், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த இளைஞா் உதய குமாா்(30) என்பதும் பாம்பன் மதுக்கடையிலிருந்து மது வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 26 மது பாட்டில்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









