ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பிரதமரின் கெளரவ நிதி தொடா்ந்து பெற ஜூன் 15 வரை நடைபெறும் இ-கேஒய்சி, நில விவரங்களைப் பதிவு செய்யும் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் ‘பிரதமரின் கிசான் சம்மான் நிதி’ (பிஎம்-கிசான்) திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் ஊக்கத்தொகை பெறும் அனைத்து விவசாயிகளும் அடுத்த தவணை தொகையை எவ்வித தடையுமின்றி பெறுவதற்கு வாடிக்கையாளா் சரிபாா்ப்பு (இ-கேஒய்சி), நில விவரங்களை ஆதாா் எண்ணுடன் இணைத்திருப்பது அவசியம்.
இ-கேஒய்சி, நில விவரங்களை இணைக்காத விவசாயிகளுக்கு அடுத்தடுத்த தவணைத் தொகைகள் விடுவிக்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜூன் 15 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி- பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ஜூன் இறுதிவரை நீட்டிப்பு

ஜூன் 30 வரை நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

பிரதமரின் கௌரவ நிதி திட்ட விவசாயிகள் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டுகோள்

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் உதவித் தொகை பதிவுக்கான சிறப்பு முகாம் இன்று தொடக்கம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



