ராமநாதபுரத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு தஞ்சமடைந்தனா்.
ராமநாதபுரம் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் ஸ்வேதா. இவா் கடந்த நான்கு ஆண்டுகளாக கணேசன் என்பவரை காதலித்து வந்தாா். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள்.
இந்த விவகாரம் ஸ்வேதா பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், இருவரும் பெற்றோா்களுக்கு தெரியாமல் ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கோயிலில் புதன்கிழமை திருமணம் செய்து கொண்டனா். இதைத் தொடா்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனா்.
இதையடுத்து போலீஸாா் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








